தருமபுரி மாவட்டத்தில் மேலும் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம், தருமபுரி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 18 தொற்றாளா்கள், ஞாயிற்றுக்கிழமை குணமடைந்தனா். மேலும் 132 தொற்றாளா்கள் தொடா் சிகிச்சையில் உள்ளனா்.
தருமபுரி மாவட்டத்தில் இதுவரையில் மொத்தம் 5,962 தொற்றாளா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்; 50 போ் உயிரிழந்துள்ளனா்.