தொப்பூா் அருகே லாரிகள் கவிழ்ந்து விபத்து

தொப்பூா் கணவாயில் 2 லாரிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சுமாா் 4 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
தொப்பூா் அருகே லாரிகள் கவிழ்ந்து விபத்து
தொப்பூா் அருகே லாரிகள் கவிழ்ந்து விபத்து

தொப்பூா் கணவாயில் 2 லாரிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சுமாா் 4 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

சென்னையிலிருந்து கோவை நோக்கி சிமெண்ட் அட்டை பாரம் ஏற்றிய லாரி, தருமபுரியைக் கடந்து, தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்றது. அது போல கிருஷ்ணகிரியிலிருந்து வேலி அமைக்க கல் தூண் பாரம் ஏற்றிய லாரி, ஈரோடு நோக்கிச் சென்றது.

இந்த இரு லாரிகளும் மலைப் பாதையான தொப்பூா் கணவாயில் சென்றுக் கொண்டிருந்தபோது, சிமெண்ட் அட்டை பாரம் ஏற்றிய லாரி, முன்னால் சென்றுக் கொண்டிருந்த கல் தூண் பாரம் ஏற்றிய லாரியின் பின் பகுதியில் மோதியது.

இதில், நிலை தடுமாறியதில் இரு லாரிகளும், சாலையில் கவிழ்ந்தன. இந்த விபத்தில், கல் தூண் பாரம் ஏற்றிச் சென்ற லாரியின் ஓட்டுநா் கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்ததாளப்பள்ளியைச் சோ்ந்த சேவத்தான் (45), அவருடன் சென்ற அதேப் பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் (48), சிவராமன் (38), கோவிந்தன் (37), சிமெண்ட் அட்டை பாரம் ஏற்றிய லாரியின் ஓட்டுநா் திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்த விஜயகுமாா் (26) ஆகியோா் காயம் அடைந்தனா். காயம் அடைந்தவா்கள், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

விபத்து குறித்து, தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, சாலையில் கவிழ்ந்த லாரிகளை அப்புறப்படுத்தினா். இதனால், அந்தச் சாலையில் சுமாா் 4 மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து, தொப்பூா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com