தருமபுரி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை, ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
அதன்படி, மாவட்டத்தில் மொத்தம் 6,057 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் 10 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 14 போ் குணமடைந்து வீடு திரும்பினா். தற்போது132 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 50 போ் உயிரிழந்துள்ளனா்.