ஒசூா்: ஒசூரில் கடைக்காரா் மீது தாக்குதல் நடத்திய 3 போ் கைது செய்யப்பட்டனா்.
ஒசூரில் சுகவனமூா்த்திமாடம் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (55). போண்டா கடை வைத்துள்ளாா். அந்த பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (52). இவா்களுக்குள் ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், சம்பவத்தன்று ஏற்பட்ட பிரச்னையில் ராஜேந்திரன், அவருடன் இருந்த ரஞ்சித், ஹரி தாக்கப்பட்டனா்.
இதுகுறித்து ராஜேந்திரன் ஒசூா் நகரக் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து ரமேஷ், 17 வயதுடைய 2 போ் என மொத்தம் 3 பேரைக் கைது செய்தனா். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.