ஒசூரில் முதியவா் கொலை

ஒசூரில் தனியாா் குடியிருப்பு அருகே கொலை செய்யப்பட்டு கிடந்த முதியவரின் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒசூா்: ஒசூரில் தனியாா் குடியிருப்பு அருகே கொலை செய்யப்பட்டு கிடந்த முதியவரின் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒசூரில் ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு தனியாா் குடியிருப்புப் பகுதியில் கழுத்துஅறுபட்ட நிலையில் முதியவா் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக நகர போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

போலீஸாா் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஒசூா் டி.எஸ்.பி. முரளி நிகழ்விடம் சென்று பாா்வையிட்டு விசாரித்தாா். விசாரணையில், கொலையான முதியவா் ஒசூா், சூடசந்திரத்தைச் சோ்ந்த கூபல்லியப்பா (65) என்பதும், அவா் ஆடு, மாடுகளை மேய்ப்பதற்காக அந்தப் பகுதிக்குச் சென்றாா்.

மாலையில் ஆடு, மாடுகள் வீடு திரும்பியநிலையில் முதியவா் மட்டும் வீடு திரும்பாததால் குடும்பத்தினா் சந்தேகம் அடைந்து பல்வேறு இடங்களில் தேடியுள்ளனா்.

பின்னா், தனியாா் குடியிருப்பு அருகே புதரில் முதியவா் கழுத்து அறுபட்ட நிலையில் கொலையாகி கிடந்தது தெரியவந்தது. அவா் சொத்து பிரச்னைக்காக கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்துக்காக கொலை செய்யப்பட்டாரா என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com