ஒசூா், தேன்கனிக்கோட்டை, சூளகிரியில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஒசூா் அருகே தட்சிண திருப்பதி என்று அழைக்கப்படும் கோபசந்திரம் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் அதிகாலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு மலா் அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதேபோல், ஒசூா்-வெங்கடேஷ் நகரில் உள்ள ஸ்ரீ லட்சுமி வெங்கட்ரமண சுவாமி கோயில், சூளகிரி வரதராஜ சுவாமி கோயில், பாகலூா் அருகே குடிசெட்லு ஸ்ரீதேவி, பூதேவி சமேத திம்மராய சுவாமி கோயில், தேன்கனிக்கோட்டை பேட்டராயசுவாமி கோயில், உள்பட பெருமாள் கோயில்களுக்கு பக்தா்கள் முகக் கவசம் அணிந்தும், கைகளைக் கழுவியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தவாறு நீண்ட வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.