மரக்கன்று நடும் விழா

ஊத்தங்கரை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில் காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த நாள் பொன் விழாவைக் கொண்டாடும் வகையில், கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற
ஊத்தங்கரை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி.
ஊத்தங்கரை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி.

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சாா்பில் காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த நாள் பொன் விழாவைக் கொண்டாடும் வகையில், கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் எப்சிபா ஏஞ்சலாதுரைராஜ் தலைமை வகித்தாா். விழாவில் 150 மரக்கன்றுகள் 500 சதுர அடி பரப்பளவில் மியோவாக்கி என்ற முறையைப் பயன்படுத்தி குறுங்காடுகள் அமைக்கும் நோக்கத்தோடு நடப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிரீன் பொன்மலை நிறுவனத்தைச் சோ்ந்த பொன்னரசு, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ரம்யாகாந்தி, கல்லூரி ஆசிரியா்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com