கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 38 பேருக்கு கரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 38 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 38 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஒசூா், போச்சம்பள்ளி, தொகரப்பள்ளி, பாகலூா், பா்கூா், காவேரிப்பட்டணம், சாமல்பட்டி, அரசம்பட்டி, ராயக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த 38 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இவா்களில் ராயக்கோட்டையைச் சோ்ந்த 83 வயது முதியவா் உள்பட 25 ஆண்கள், ஆந்திர மாநிலம், குப்பத்தைச் சோ்ந்த 34 வயது பெண் உள்பட 13 பெண்கள் அடங்குவா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரையில் மொத்தம் 4,919 போ், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது கிருஷ்ணகிரி, ஒசூா், பா்கூரில் உள்ள சிகிச்சை மையங்களில் 788 தொற்றாளா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா்; ஞாயிற்றுக்கிழமை மட்டும் 86 போ் குணமடைந்துள்ளனா்.

3 போ் உயிரிழப்பு:

கரோனா தொற்றால் சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 67 வயது ஆணும், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 68 வயது ஆணும், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 64 வயது ஆணும் அக். 2, 3-ஆம் தேதிகளில் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com