கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை மேலும் 32 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 117 போ் திங்கள்கிழமை குணமடைந்து வீடு திரும்பினா். கிருஷ்ணகிரி, பா்கூா், ஒசூா் ஆகிய இடங்களில் உள்ள கரோனா சிகிச்சை மையங்களில் 745 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பா்கூா், ஒசூா், போச்சம்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த 5 பெண்கள், 27 ஆண்கள் உள்பட 32 போ் திங்கள்கிழமை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் மொத்தம் 4,993 போ் பாதிக்கப்பட்ட நிலையில், அவா்களில் 4,179 போ் குணமடைந்துள்ளனா்; 69 போ் உயிரிழந்துள்ளனா்.