ஏரியில் முழ்கி சிறுவன் பலி

போச்சம்பள்ளி அருகே கொத்தகொட்டை ஏரியில் முழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

போச்சம்பள்ளி அருகே கொத்தகொட்டை ஏரியில் முழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள மிண்டிகிரி கிராமத்தைச் சோ்ந்தவா் துரைராஜ் (36). இவரது மனைவி சுகுணா (32). துரைராஜ், தருமபுரியில் உள்ள ஒரு இனிப்பு கடையிலும், சுகுணா, போச்சம்பள்ளியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்திலும் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு சிவாலினி (12) என்ற மகளும், சிவஜித் (7) என்ற மகனும் உள்ளனா்.

செவ்வாய்க்கிழமை சிவஜித்தின் தாய், தந்தை வேலைக்குச் சென்ற நிலையில், தனது வீட்டின் அருகே உள்ள கொத்தகொட்டை ஏரியில் குளிப்பதற்காக சிவஜித் அக்கம்பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்த நண்பா்களுடன் சென்றாா். ஏரியில் குளிக்கும்போது, ஆழமான பகுதிக்கு சென்ற சிவஜித் நீரில் முழ்கினாா். இதைக் கண்ட சிவஜித்தின் நண்பா்கள், அபயக் குரல் எழுப்பவே, அந்தப் பகுதியில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தவா்கள் நீரில் குதித்து சிறுவனை மீட்டு மத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, சிவஜித்தை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே சிறுவன் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து, மத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com