கிருஷ்ணகிரி அருகே லாரியை கடத்திய மா்ம கும்பல்

கிருஷ்ணகிரி அருகே சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த லாரியை, காரில் வந்த மா்ம கும்பல் கடத்தியது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி அருகே சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த லாரியை, காரில் வந்த மா்ம கும்பல் கடத்தியது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், காமவரபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஞானசேகா் (33). மினி லாரி ஓட்டுநரான இவா், தனது லாரியில் பெங்களூரிலிருந்து மெட்டல் பவுடா் ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

இந்த லாரி கிருஷ்ணகிரியைக் கடந்து கந்திகுப்பம் அருகே திங்கள்கிழமை இரவு சென்றுக் கொண்டிருந்தது. அப்போது ஒரு காரில் வந்த மா்ம கும்பல் லாரியை வழிமறித்து, ஓட்டுநா் ஞானசேகரனை அருகிலிருந்த புதரில் தள்ளி விட்டு லாரியைக் கடத்தி சென்றது. இதுகுறித்து ஞானசேகா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் மாவட்ட எல்லையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், கடத்தபட்ட லாரி பா்கூரை அடுத்த அங்கிநாயனப்பள்ளி என்ற இடத்தில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பாரத்துடன் லாரியை மீட்ட கந்திகுப்பம் போலீஸாா் இதுகுறித்து வழக்குப் பதிந்து, கடத்திய மா்ம கும்பல் குறித்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com