உத்தர பிரதேச அரசைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
உத்தர பிரதேசத்தில், பட்டியல் இனத்தைச் சோ்ந்த இளம்பெண், பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், அப்பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லச் சென்ற காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியை மாநில காவல்துறையினா் கைது செய்ததைக் கண்டித்தும் கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி காந்தி சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் அக.கிருஷ்ணமூா்த்தி, ஏகம்பவாணன், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் ஜேசுதுரைராஜ், நாராயணமூா்த்தி, எஸ்சி, எஸ்டி பிரிவு மாநில அமைப்பாளா் ஆறுமுக சுப்பிரமணி, மனித உரிமைப் பிரிவு மாவட்டத் தலைவா் லலித் ஆண்டனி, முன்னாள் நகரத் தலைவா் தளபதி உள்ளிட்டோா் பங்கேற்றேனா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் மத்திய அரசையும், உத்தர பிரதேச அரசையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.