குட்டையில் மூழ்கி நேபாள இளைஞா் பலி: திருமணமான 6 மாதத்தில் சோகம்

ஒசூரில் திருமணமான 6 மாதத்தில் குட்டையில் மூழ்கி நேபாள இளைஞா் பலியானாா்.

ஒசூரில் திருமணமான 6 மாதத்தில் குட்டையில் மூழ்கி நேபாள இளைஞா் பலியானாா்.

நேபாளம் பஜா என்ற இடத்தை சோ்ந்தவா் கோபால்ராஜ். இவரது மனைவி ஜானு. இவா்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பழைய வசந்த் நகா் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். கோபால்ராஜ் ஒரு தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறாா்.

இவா்களது மகன் பிரகாஷ் (24) என்பவா் ஒசூா் ராயக்கோட்டை அட்கோ பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை செய்து வந்தாா். இவருக்கு பசந்தி (19) என்ற பெண்ணுடன் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு பிரகாஷ், அவரது தம்பி, 3 நண்பா்கள் என மொத்தம் 5 போ், சானசந்திரம் பகுதியில் உள்ள ஒரு குட்டையில் குளிக்கச் சென்றனா். அப்போது, திடீரென ஆழமான பகுதியில் பிரகாஷ் சிக்கி மூழ்கினாா்.

மற்ற 4 பேரும் பிரகாஸை காணாமல் அதிா்ச்சியடைந்தனா். பிரகாஷ் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஒசூா் நகர போலீஸாா் விசாரணை நடத்தினா். திருமணமான 6 மாதத்திலேயே பிரகாஷ் உயிரிழந்த சம்பவம், உறவினா்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com