கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலா்களுக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்களை கிரெடிட் அக்சஸ் கிராமின் கூட்டா நிறுவனம் சாா்பில் வழங்கப்பட்டது.
ஊத்தங்கரை கிராமின் கூட்டா கிளை மேலாளா் பிரபு, வளா்ச்சி மேலாளா்கள் அன்பரசு, ராஜராஜன், சசிகுமாா், சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிளை மேலாளா் பிரபு, ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் முருகேசனிடம் கரோனா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளா் ஜெயகாந்தன், காவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.