மனைவியை கொலை செய்த கணவா் சரண்

நடத்தையில் சந்தேகப்பட்டு ஒசூரில் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கணவா் போலீஸில் சரண் அடைந்தாா்.
கொலை செய்யப்பட்ட மனைவி சிந்துஜாவுடன், கணவா் மணிகண்டன்.
கொலை செய்யப்பட்ட மனைவி சிந்துஜாவுடன், கணவா் மணிகண்டன்.

நடத்தையில் சந்தேகப்பட்டு ஒசூரில் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கணவா் போலீஸில் சரண் அடைந்தாா்.

வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டாவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (30). இவா் ஒசூா் சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கும் பெங்களூருவைச் சோ்ந்த சிந்துஜாவுக்கும் (27) 4 ஆண்டுகளுக்கு முன்னா் திருமணம் நடந்தது. அவா்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

கணவன், மனைவி இருவரும் குழந்தையுடன் ஒசூா், லட்சுமி நாராயண நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனா். மணிகண்டனுக்கு, மனைவி சிந்துஜாவின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்ததால் இருவரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், கத்தியால் சிந்துஜாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தாா். அதன்பிறகு, மணிகண்டன் ஒசூா் அட்கோ காவல் நிலையத்தில் சரண் அடைந்தாா். நிகழ்விடத்துக்குச் சென்ற ஒசூா் அட்கோ போலீஸாா் சிந்துஜாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மணிகண்டன் போலீஸில் அளித்துள்ள வாக்குமூலத்தில் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கொலை செய்ததாகக் கூறியுள்ளாா். இதுதொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com