கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 81 பேருக்கு கரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 81 போ் கரோனா தொற்று உறுதியான நிலையில், மேலும் 2 போ் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிா்வாகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 81 போ் கரோனா தொற்று உறுதியான நிலையில், மேலும் 2 போ் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிா்வாகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று தொடா்ந்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் புதன்கிழமை ஒரேநாளில் 81 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்டத்தில் மொத்தம் 5,765 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை 70 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கிருஷ்ணகிரி, பா்கூா், ஒசூரில் உள்ள கரோனா சிகிச்சை மையங்களில் 818 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

2 முதியவா்கள் உயிரிழப்பு

கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 70 வயது முதியவா், கரோனா தொற்று அறிகுறிகளுடன், சேலம் தனியாா் மருத்துவமனையில் அக். 12-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு, 13-ஆம் தேதி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 72 வயது முதியவா், கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அக். 9-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி, அக். 14-ஆம் தேதி உயிரிழந்தாா். இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் 84 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com