சிறுமி பாலியல் பலாத்காரம்: இளைஞா் போக்சோவில் கைது

கிருஷ்ணகிரி அருகே திருமணம் செய்வதாகக் கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி அருகே திருமணம் செய்வதாகக் கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் தொழிலாளியின் 17 வயது மகள். அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறாா். அதே பகுதியைச் சோ்ந்த அரவிந்த் (25) என்ற இளைஞா், அந்த சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் பலாத்காரம் செய்தாராம்.

தற்போது திருமணம் செய்ய மறுத்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அரவிந்தை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com