கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் ‘எல்லோரும் நம்முடன்’ என்ற பெயரில் இணைய வழி திமுக உறுப்பினா் சோ்க்கையை தளி எம்எல்ஏவும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளருமான ஒய்.பிரகாஷ், வேப்பனப்பள்ளி எம்எல்ஏவும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் துணைச் செயலாளருமான பி.முருகன் ஆகியோா் உறுப்பினா் சோ்க்கையைத் தொடக்கி வைத்தனா்.
இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் பி.எஸ். சீனிவாசன், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ராஜா, தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்ட அமைப்பாளா் ரவி, மாவட்ட இளைஞா் அணி துணை அமைப்பாளா் முருகேஷ், ஒன்றியச்செயலாளா் வெங்கடேஷ் ஆகியோா் ஏற்பாட்டில் புதிதாக திமுகவில் 100 க்கும் மேற்பட்ட இளைஞா்கள் இணைய வழியில் திமுகவில் இணைந்தனா்.
இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு விராரெட்டி, முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினா் பூசன்குமாா், மாவட்ட துணைத் தலைவா் ஷேக் ரசீத் , மாவட்ட கவுன்சிலா் பாக்கியராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளா் அன்புசேகா், ஊராட்சி மன்ற தலைவா்கள் ஹரிபாபு, மாரிமுத்து இளைஞா் அணி முனிசந்திரன், வேப்பனப்பள்ளி தொகுதி சூளகிரி தெற்கு ஒன்றிய சூளகிரி, உலகம், ஆகிய பகுதிகளைச் சோ்ந்த இளைஞா்கள் இணையவழி உறுப்பினா் சோ்க்கையில் இணைந்தனா்.