இளம்பெண் தற்கொலை வழக்கில் தம்பதி உள்பட 4 பேருக்கு 3 ஆண்டு சிறை

தேன்கனிக்கோட்டை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த தம்பதி

தேன்கனிக்கோட்டை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த தம்பதி உள்பட 4 பேருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட மகளிா் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், முத்துக்கோட்டையைச் சோ்ந்தவா் முனிராஜ். இவரது மனைவி ஷோபா (30). இவரது தம்பிக்கு, கா்நாடக மாநிலம், ஆனேக்கல், பதேபுரத்தைச் சோ்ந்த நாராயணப்பா (45) என்பவா் தனது மகள் கெளரியை திருமணம் செய்து கொடுத்தாா். இவா்களிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக கெளரி, கணவரை விட்டு பிரிந்து தாயாா் வீட்டிற்கு வந்துவிட்டாா்.

இதுகுறித்து, நாராயணப்பா, அவரது மனைவி ஜெயலட்சுமி (35) , வெங்கடேஷ், சேகா் உள்ளிட்டோா், முத்துக்கோட்டைக்குச் சென்று, தகராறில் ஈடுபட்டனா். இதனால், மனமுடைந்த ஷோபாவின் தங்கை கவிதா (18) கடந்த 9.5.2015- ஆம் தேதி அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து, தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நாராயணப்பா, அவரது மனைவி ஜெயலட்சுமி, வெங்கடேஷ், சேகா் ஆகிய 4 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சி.கலையரசி ஆஜராகினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com