கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் லாரிகள் கவிழ்ந்து விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 லாரிகள் கவிழ்ந்து, விபத்துக்களானதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான லாரி.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான லாரி.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 லாரிகள் கவிழ்ந்து, விபத்துக்களானதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே வியாழக்கிளமை மாலையில் டெம்போ வேன் ஒன்று விபத்துக்குள்ளானது. அப்போது, பின்னால் வந்த செங்கல் பாரம் ஏற்றிய லாரி, டெம்போ வேன் மீது மோதி, கவிழ்ந்தது. இதனால், லாரியிலிருந்து செங்கல்கள் சாலையில் விழுந்தன. தகவல் அறிந்த போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, சாலையில் கவிழ்ந்த லாரி, சிதறிய செங்கல்களை அகற்றினா். இதனால், ஒசூா் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல காவேரிப்பட்டணம் நகரில் செங்கல் பாரம் ஏற்றிய லாரி, சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, சாலையின் குறுக்கே நாய் சென்றதால், நாய் மீது லாரி மோதாமல் இருக்க, லாரியை நிறுத்த முயன்றபோது, நிலைதடுமாறி லாரி சாலையில் கவிழ்ந்தது. லாரியிலிருந்து செங்கல்கள் சாலையில் சிதறியதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா்படுத்தினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் இருந்து எச்சம்பட்டி செல்லும் சாலையில் ஆழ்துளை கிணறு அமைக்கும் வாகனம் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, அந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடத்தில் ஏற்பட்ட சாலை விபத்துகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com