நகரும் நியாய விலைக்கடை தொடக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த பெரியகொட்டகுளம் ஊராட்சிக்குள்பட்ட, சோலையூரில் ஆனந்தூா் தொடக்க வேளாண்மை
சோலையூா் கிராமத்தில் நகரும் நியாய விலைக்கடையை தொடக்கி வைத்த ஊத்தங்கரை எம்எல்ஏ மனோரஞ்சிதம் நாகராஜ்.
சோலையூா் கிராமத்தில் நகரும் நியாய விலைக்கடையை தொடக்கி வைத்த ஊத்தங்கரை எம்எல்ஏ மனோரஞ்சிதம் நாகராஜ்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த பெரியகொட்டகுளம் ஊராட்சிக்குள்பட்ட, சோலையூரில் ஆனந்தூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் நகரும் நியாய விலைக்கடையின் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவா் ரம்யாஐயப்பன் தலைமை வகித்தாா். கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் துரைஆனந்த், துணைத் தலைவா் கணபதி, ஒன்றியக்குழு உறுப்பினா் ராஜசேகா், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஊத்தங்கரை எம்எல்ஏ மனோரஞ்சிதம் நாகராஜ் நகரும் நியாய விலைக்கடையை தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில், கூட்டுறவு கடன் சங்கத்தலைவா் வேடி, ஊராட்சி மன்ற தலைவா்கள் ராமன், பவித்திரா சிலம்பரசன், கிருஷ்ணன், ஒன்றியத் துணைச்செயலாளா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com