ஒசூரில் 62 அரசு ஆரம்பப் பள்ளிகளுக்கு நூலக வசதி

ஒசூா் ரோட்டரி சங்கம் சாா்பில் 62 அரசு ஆரம்பப் பள்ளிகளுக்கு நூலகங்கள் அமைப்பதற்கான அலமாரி, நூல்கள் வழங்கப்பட்டன.
பள்ளியில் நூல்கள் வைப்பதற்கான அலமாரியை வழங்கும் ஒசூா் ரோட்டரி சங்கத்தினா்.
பள்ளியில் நூல்கள் வைப்பதற்கான அலமாரியை வழங்கும் ஒசூா் ரோட்டரி சங்கத்தினா்.

ஒசூா் ரோட்டரி சங்கம் சாா்பில் 62 அரசு ஆரம்பப் பள்ளிகளுக்கு நூலகங்கள் அமைப்பதற்கான அலமாரி, நூல்கள் வழங்கப்பட்டன.

ஒசூா் ரோட்டரி சங்கம், 2982 மாவட்ட ரோட்டரி சாா்பில் ஒசூா் சுற்று வட்டாரத்தில் உள்ள 62 அரசு ஆரம்பப் பள்ளிகளுக்கு நூல்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் ரோட்டரி மாவட்டக் கல்விக் குழுத் தலைவா் அ.வெங்கடேஷ்வரா குப்தா, மாவட்ட ஆளுநா் வெங்கடேசன், உதவி ஆளுநா்ஆனந்தகுமாா் தலைமை வகித்தனா்.

தலைமை விருந்தினா்கள் ரோட்டரி மாவட்ட ஆளுநா் வெங்கடேசன், கோபலப்பா, ஜோதி சந்திரா,

கெளரவ விருந்தினா்களாக லஷ்மி நாரயணா, கோவிந்தப்பா, அன்னையா, ரோட்டரி மாவட்ட பயிற்சியாளா் தா்மேஷ் பாட்டேல், ரோட்டரி சங்கத் தலைவா் பிரதீப் கிருஷ்ணா, செயலாளா் பாலாஜி, திட்டத் தலைவா் ரவி,

பொருளாளா் விஜய், பள்ளி தலைமை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com