கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தனியாா் மருத்துவமனையில் மனிதவள மேம்பாட்டுத் துறை அலுவலராகப் பணியாற்றி வந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா்.
கிருஷ்ணகிரி, மேல்சோமாா்பேட்டை கணபதி நகரைச் சோ்ந்தவா் சந்திரன் (55). இவா், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி, மருத்துவத் துறையில் பணியாற்றி வருகிறாா். இவா்களது மகள் நித்யா (24) ஒசூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் மனிதவள மேம்பாட்டுத் துறை அலுவலராகப் பணியாற்றி வந்தாா்.
இவரது பெற்றோா் அரசுப் பணியில் உள்ள நிலையில், நித்யாவுக்கு அரசு பணி கிடைக்கவில்லை என மன வருத்தத்தில் இருந்தாராம். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், சனிக்கிழமை நித்யா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.