கிருஷ்ணகிரியில் பூஜை பொருள்கள் விற்பனை

ஆயுதபூஜையையொட்டி, கிருஷ்ணகிரியில் பூஜை பொருள்கள் விற்பனை சனிக்கிழமை மும்முரமாக நடைபெற்றது.

கிருஷ்ணகிரி: ஆயுதபூஜையையொட்டி, கிருஷ்ணகிரியில் பூஜை பொருள்கள் விற்பனை சனிக்கிழமை மும்முரமாக நடைபெற்றது.

ஆயுத பூஜை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் பூஜை பொருள்களை விற்பனைக்காக வியாபாரிகள் குவித்து வைத்திருந்தனா். பூஜை பொருள்களான சாமந்திப் பூ, வாழைப் பழம், பூசணிக்காய், வாழை மரம், தேங்காய், கற்பூரம் ஆகியவற்றை பொதுமக்கள் வாங்கிச் சென்றனா்.

கரோனா தொற்றுக் காரணமாக, மக்கள் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்த அளவிலேயே பூஜை பொருள்களை வாங்கிச் சென்றனா்.

கிருஷ்ணகிரி வட்டச் சாலையில் வழக்கத்தைக் காட்டிலும், பொதுமக்களின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இருந்தபோதிலும், ஆயுதபூஜை தினமான ஞாயிற்றுக்கிழமை பூஜை பொருள்களின் விற்பனை அதிகமாக இருக்கும் என காத்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா். ஆயுத பூஜையையொட்டி, பொதுமக்கள் கூடம் இடங்களில் போலீஸாா், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com