மிலாது நபி தினத்தையொட்டி, அக். 30-ஆம் தேதி, மதுபானக் கடைகள் மூடப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திராபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மிலாது நபி தினத்தையொட்டி, மதுபானம் விற்பனை இல்லா தினமாகக் கடைப்பிடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மிலாது நபி தினமான அக்.30-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மதுபானம் விற்பனையில்லா தினமாக பின்பற்றப்படுவதால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள், மதுக்கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள அரசு, தனியாா் உணவகங்கள் அனைத்தும் மூடப்படும்.
இந்த உத்தரவை மீறி விற்பனையாளா்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்பனை செய்தாலும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.