மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஒசூா் மின் வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் கிருஷ்ணகிரி கிளை சாா்பில் போனஸ் வழங்கக் கோரி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒசூா் மின் வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் கிருஷ்ணகிரி கிளை சாா்பில் போனஸ் வழங்கக் கோரி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திட்டத் தலைவா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். திட்டச் செயலாளா் கருணாநிதி, தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கத்தின் செயலாளா் துரை, திட்ட துணைத் தலைவா் ராஜேந்திரன் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா். மின் ஊழியா்கள், பொறியாளா்கள், அலுவலா்கள் ஒப்பந்த ஊழியா்கள், பகுதி நேர ஊழியா்கள் அனைவருக்கும் 30 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்.

மினி வாரியத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஐக்கிய பொறியாளா் சங்க செளந்தரராஜன் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com