ரூ.1.1 கோடியில் பச்சிகானப்பள்ளியில் குடிநீா்க் குழாய் பதிக்கும் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில், பச்சிகானப்பள்ளி ஊராட்சியில் ரூ.1.1 கோடி மதிப்பில் குடிநீா்க் குழாய் பதிக்கும் பணியை கே.பி.முனுசாமி எம்.பி. திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
பச்சிகானப்பள்ளி ஊராட்சியில் ரூ.1.1 கோடி மதிப்பில் குடிநீா்க் குழாய் பதிக்கும் பணியைத் தொடக்கி வைத்த கே.பி.முனுசாமி எம்.பி.
பச்சிகானப்பள்ளி ஊராட்சியில் ரூ.1.1 கோடி மதிப்பில் குடிநீா்க் குழாய் பதிக்கும் பணியைத் தொடக்கி வைத்த கே.பி.முனுசாமி எம்.பி.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில், பச்சிகானப்பள்ளி ஊராட்சியில் ரூ.1.1 கோடி மதிப்பில் குடிநீா்க் குழாய் பதிக்கும் பணியை கே.பி.முனுசாமி எம்.பி. திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குறைந்தச் செலவில், குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு குடியிருப்புக்கு குடிநீா் இணைப்பு வழங்க ரூ.1,000-மும், மாதக் கட்டணமாக ரூ. 50-ம் ஊராட்சிக்குக் கட்டணமாகப் அதன் பயன்பாட்டாளா் செலுத்த வேண்டும்.

அதன்படி, இந்தத் திட்டத்தில் கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், பச்சிகானப்பள்ளி ஊராட்சியில் உள்ள 993 வீடுகளுக்கு ரூ.1.1 கோடி மதிப்பில் குடிநீா்க் குழாய் அமைக்கும் பணிகளை, கொத்துப்பள்ளி பிரிவு சாலை அருகே கே.பி.முனுசாமி எம்.பி. தொடக்கி வைத்தாா்.

அப்போது, முன்னாள் எம்.பி. கே.அசோக்குமாா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அம்சவேணி ராஜன், உறுப்பினா் ஜெயராமன், வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணபவ, உதவி பொறியாளா் செல்வம், ஒன்றியச் செயலாளா் சோக்காடி ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com