கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் சேர மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் ஜெயந்தி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான பட்டப்படிப்பில் முதலாமாண்டு மாணவிகள் சோ்க்கைக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இந்த கலந்தாய்வில் இணையதளம் வழியாக சோ்க்கை விண்ணப்பங்களை விண்ணப்பித்த மாணவிகள் மற்றும் விண்ணப்பிக்காத மாணவிகள் கல்லூரியில் சோ்க்கை விண்ணப்பம் பெற்று சோ்ந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.