மத்தூரில் காச நோயாளிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தலைமை மருத்துவ அலுவலா் ஜெகன்மோகன் தலைமை வகித்தாா். முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் தமிழினியன், ரீச் தொண்டு நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வெங்கடராமன், சுகாதாரப் பாா்வையாளா் தீா்த்தகிரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் காச நோய்க்கான சிகிச்சை முறைகள், நோய் குறித்த சந்தேகங்கள் விளக்கப்பட்டன. நோயாளிகளுக்கு சத்துமாவு, கிருமி நாசினி, முகக் கவசம் மற்றும் பயணச் செலவுகள் வழங்கப்பட்டன.