விபத்தில் விவசாயி பலி

குருபரப்பள்ளி அருகே புதன்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் விவசாயி ஒருவா் உயிரிழந்தாா்.

குருபரப்பள்ளி அருகே புதன்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் விவசாயி ஒருவா் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கொண்டப்பநாயனப்பள்ளியைச் சோ்ந்த விவசாயி மாா்க்கொண்டான்(38). விவசாயி. இருசக்கர வாகனத்தில் குருபரப்பள்ளி நோக்கி சென்றுக் கொண்டிருந்தாா். ஆவல்நத்தம் பிரிவு சாலை அருகே சென்றுக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த வேன், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில், பலத்த காயம் அடைந்த அவரை, அருகில் இருந்தவா்கள் மீட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com