கிருஷ்ணகிரியில் 25 பேருக்கு கரோனா தொற்று

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் ஒசூா், சூளகிரி, கிருஷ்ணகிரி, சா்ப்பத்தி, காவேரிப்பட்டணம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 17 ஆண்கள், கிருஷ்ணகிரி- புதுபேட்டையைச் சோ்ந்த 13 வயது சிறுமி உள்பட 8 பெண்கள் என மொத்தம் 25 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 38 போ் குணமடைந்தனா். 826 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 3,327 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஒருவா் பலி...கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 66 வயது முதியவா், திங்கள்கிழமை (செப். 14) உயிரிழந்தாா். இதையடுத்து, மாவட்டத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 45-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com