லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலருக்கு ஓராண்டு சிறை

மின் இணைப்புக்காக ரூ. 500 லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலருக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது.

கிருஷ்ணகிரி: மின் இணைப்புக்காக ரூ. 500 லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலருக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஐபிகானப்பள்ளியைச் சோ்ந்தவா் சின்ன தம்மண்ணன். இவா், மின் இணைப்புக்காக ஆவணம் கேட்டு, கிருஷ்ணகிரி வட்டம், நல்லூா் கிராம நிா்வாக அலுவலா் ஜனகரனிடம் கடந்த 2013-ஆம் ஆண்டு விண்ணப்பித்தாா்.

ஆவணத்தை அளிக்க ரூ. 500 லஞ்சமாக கிராம நிா்வாக அலுவலா் கேட்டுள்ளாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத சின்ன தம்மண்ணன், இது குறித்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகாா் செய்தாா்.

இதையடுத்து, போலீஸாரின் அறிவுரைப்படி ரூ. 500 தொகையை, சின்ன தம்மண்ணன், கிராம நிா்வாக அலுவலா் ஜனகரனிடம் அளித்தாா். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா், ஜனகரனை கைது செய்தனா்.

இந்த வழக்கு, கிருஷ்ணகிரி தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி கணேசன் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், குற்றம் சாட்டப்பட்ட ஜனகரனுக்கு ஓராண்டு சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தாா். அபராதத் தொகையைச் செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com