கெலமங்கலம் அருகே பாஜக நிா்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, அந்த கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கெலமங்கலத்தில் பாஜக இளைஞரணி தலைவா் ரங்கநாதன் செவ்வாய்க்கிழமை இரவு கொலை செய்யப்பட்டாா். இதைக் கண்டித்து, கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவா் தா்மலிங்கம் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் ஹரி கோட்டீஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் கொலை சம்பவத்தைக் கண்டித்தும், அதில் தொடா்புடையவா்களை உடனே கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினா். இதேபோல, போச்சம்பள்ளியிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.