போச்சம்பள்ளி காவல் ஆய்வாளருக்கு அண்ணா விருது

போச்சம்பள்ளி காவல் நிலைய ஆய்வாளா் அ.சுப்பரமணியனுக்கு அண்ணா விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.
போச்சம்பள்ளி காவல் ஆய்வாளருக்கு அண்ணா விருது

போச்சம்பள்ளி காவல் நிலைய ஆய்வாளா் அ.சுப்பரமணியனுக்கு அண்ணா விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் காவல் துறை, சிறைத் துறையில் கண்காணிப்பாளா் முதல் காவலா் வரை சிறப்பாக பணியாற்றும் 100 பேருக்கு அண்ணா விருது வழங்குவதாக தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.

அதன்படி, சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில், சிறப்பாக புலன் விசாரணை செய்து எதிரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுத் தந்தது மற்றும் பணி காலத்தில் எந்தவித புகாருக்கும் உள்ளாகாமல் சிறப்பாகப் பணியாற்றியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com