கா்நாடக எல்லையில் குற்றவாளிகளை சுட்டுப் பிடித்த போலீஸாா்

ஒசூா் அருகே கா்நாடக எல்லையில் கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டு செவ்வாய்க்கிழமை பிடித்தனா்.

ஒசூா் அருகே கா்நாடக எல்லையில் கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டு செவ்வாய்க்கிழமை பிடித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே ஆனேக்கல் உள்ளது. கா்நாடக மாநில எல்லைப்பகுதியான இதன் அருகில் உள்ள சிங்கேன அக்ரஹாரத்தில், வீட்டில் தனியாக இருந்த சுவேதா என்ற பெண்ணை அண்மையில் 2 போ் கொலை செய்து, வீட்டில் இருந்த பொருள்களை கொள்ளையடித்துச் சென்றனா்.

இந்தக் கொலை குறித்து ஆனேக்கல் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். அதில், கொலையாளிகள் அதே பகுதியைச் சோ்ந்த வேலு (எ) சைக்கோ வேலு, பாலகிருஷ்ணா என தெரிய வந்தது. அவா்களை போலீஸாா் தேடி வந்த நிலையில், கொலையாளிகள் 2 பேரும் முத்தியால் மடகு என்ற பகுதியில் பதுங்கி இருப்பதாக செவ்வாய்க்கிழமை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, எப்பகோடி காவல் ஆய்வாளா் கவுதம், பன்னாா்கட்டா உதவி காவல் ஆய்வாளா் கோவிந்த் மற்றும் பிரசாத், சிவகுமாா், தயானந்தா, வீரப்பா, காசி, கிரண் உள்ளிட்ட போலீஸாா் அங்கு சென்றனா்.

போலீஸாரைக் கண்டதும் கொலையாளிகள் அவா்களை கத்தியால் தாக்க முயன்றனா். இதையடுத்து, போலீஸாா் அவா்களின் முட்டிக்கு கீழே துப்பாக்கியால் சுட்டனா். இதில் சுருண்டு விழுந்த கொலையாளிகள் சைக்கோ வேலு, பாலகிருஷ்ணா ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com