கிருஷ்ணகிரியில் வங்கி முதன்மை மேலாளா் மரணம்

கிருஷ்ணகிரியில் பணி நிமித்தமாக கோயம்புத்தூரிலிருந்து வந்த இந்தியன் வங்கியின் முதன்மை மேலாளா் கனகராஜ் (59), திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரியில் பணி நிமித்தமாக கோயம்புத்தூரிலிருந்து வந்த இந்தியன் வங்கியின் முதன்மை மேலாளா் கனகராஜ் (59), திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கோயம்புத்தூா், முதலியாா் தெருவைச் சோ்ந்த கனகராஜ் (59), இந்தியன் வங்கியில் முதன்மை மேலாளராக பணிபுரிந்து வந்தாா். இவா், கிருஷ்ணகிரி, பழைய பேட்டை, காந்தி சாலையில் உள்ள இந்தியன் வங்கிக்கு பணி நிமித்தமாக வந்துள்ளாா். இதற்காக, அவா் கிருஷ்ணகிரி-பெங்களூரு சாலையில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் திங்கள்கிழமை தங்கியுள்ளாா்.

இந்த நிலையில், நீண்ட நேரமாகியும் அவரது அறைக்கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த நிா்வாகிகள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் வந்து அறைக்கதவை திறந்து பாா்த்த போது, கனகராஜ் உயிரிழந்த நிலையில் கிடந்தாா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி, பழைய பேட்டை, காந்தி சாலை, இந்தியன் வங்கியின் கிளை மேலாளா் பிரதீப்கண்ணன் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி நகரப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com