சூளகிரியில் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகம்

சூளகிரியை தலைமையிடமாகக் கொண்டு மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகம் செப். 25-ஆம் தேதி முதல் செயல்படும்

சூளகிரியை தலைமையிடமாகக் கொண்டு மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகம் செப். 25-ஆம் தேதி முதல் செயல்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் ஜெ.சுதாகரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழகத்துக்கு உள்பட்ட கிருஷ்ணகிரி மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் கட்டுப்பாட்டில் கிருஷ்ணகிரியை தலைமையிடமாகக் கொண்டு கிருஷ்ணகிரி உதவி செயற்பொறியாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இனி இந்த அலுவலகம் சூளகிரி சுற்று வட்டார மக்களின் நலன் கருதி, செப். 25-ஆம் தேதி முதல் சூளகிரியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும். மேற்கண்ட அலுவலகம் சூளகிரி, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம், துணை மின்நிலைய வளாகம் என்ற முகவரியில் செயல்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com