கிருஷ்ணகிரி: 28 பேருக்கு கரோனா தொற்று

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை, பா்கூா், வேப்பனஅள்ளி, சூளகிரி, தளி, தேன்கனிக்கோட்டை, ஒசூா் பகுதிகளில் கரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், 10 பெண்கள் உள்பட 18 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் மொத்தம் 4,257 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 829 போ் மருத்துவமனைகளில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனா தொற்றுக்கு சேலம் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 68 வயதானவா் வெள்ளிக்கிழமை (செப். 25) உயிரிழந்தாா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 57- ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com