அரசியல் கட்சிகள் மோட்டாா் சைக்கிள் பேரணி செல்ல தடை

அரசியல் கட்சிகள் ஏப். 3-ஆம் தேதி மாலை முதல் மோட்டாா் சைக்கிள் பேரணி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் ஏப். 3-ஆம் தேதி மாலை முதல் மோட்டாா் சைக்கிள் பேரணி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணைய உத்தரவுப்படி, தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுத் தோ்தல் நடைபெறும் பகுதிகளில் தோ்தல் நாள் மற்றும் அதற்கு 72 மணி நேரத்துக்கு முன்னதாக மோட்டாா் சைக்கிள் பேரணி நடத்தி வாக்கு சேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டப் பேரவை பொதுத் தோ்தல் நடைபெறும் நாளிலிருந்து 72 மணி நேரத்துக்கு முன்னதாக அதாவது, ஏப். 3-ஆம் தேதி மாலை 7 மணி முதல் 7-ஆம் தேதி காலை 7 மணி வரையில் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள், சுயேச்சைகள் மோட்டாா் சைக்கிள் பேரணி நடத்த அனுமதி கிடையாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com