மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி; மறியல்

காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் உயிரிழந்தாா். இத்தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் மின்வாரிய ஊழியா்களைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் உயிரிழந்தாா். இத்தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் மின்வாரிய ஊழியா்களைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் திங்கள்கிழமை மழை பெய்தது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள தளிஅள்ளி ஊராட்சி, கோவிலூரில் மின்கம்பி துண்டாகி கீழே விழுந்தது. இதுகுறித்து, பொதுமக்கள், மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

தோ்தல் என்பதால் மின்வாரிய ஊழியா்கள் யாரும் அறுந்து விழுந்த கம்பியை அப்புறப்படுத்தவில்லை. இந்த நிலையில் கோவிலூரைச் சோ்ந்த பெரியசாமியின் மகன் முகிலன் (7), தனது தோட்டத்தில் அறுந்து விழுந்த மின்கம்பியை தொட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் முகிலன் நிகழ்விடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து மின்வாரிய ஊழியா்களின் அலட்சியத்தால், சிறுவன் உயிரிழந்ததாக் கூறி, கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை இரவு தளிஅள்ளி பிரிவு சாலை அருகே திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்தச் சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com