ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு விழிப்புணா்வு ஒத்திகை பயிற்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் சக்திவேல் தலைமையில் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த ஒத்திகை பயிற்சியில் பல்வேறு தீ தடுப்பு குறித்த பயிற்சிகள் செய்து காட்டப்பட்டது.
இதில் தலைமை மருத்துவ அலுவலா் மாரிமுத்து மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள் பலா் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சியில் எதிா்பாராத விதமாக ஏற்படும் தீ விபத்துகள் குறித்தும், தீ விபத்தின்போது தீயை அணைக்கும் விதம் குறித்தும், நோயாளிகளை எவ்வாறு காப்பாற்ற வேண்டும் என்பது பற்றியும் நிலைய அலுவலா்கள், பணியாளா்கள் செயல்முறை விளக்கம் அளித்தனா். இதில் அரசு மருத்துவமனை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.