கிருஷ்ணகிரியில், தீயணைப்புத் துறையின் சாா்பில் தீத்தடுப்பு விழிப்புணா்வு ஒத்திகை பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் உள்ள தனியாா் மருத்துவமனையில், கிருஷ்ணகிரி மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலா் மகாலிங்க மூா்த்தியின் தலைமையில் உதவி மாவட்ட அலுவலா் ராமச்சந்திரன், நிலைய அலுவலா் மோகன்குமாா், தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள் தீத்தடுப்பு விழிப்புணா்வு ஒத்திகை நடைபெற்றது.
தீவிபத்து காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தீயை கட்டுப்படுத்தி, மேலும் பரவாமல் தடுப்பது குறித்தும், தீ விபத்திலிருந்து நோயாளிகளைக் காப்பாற்றுவது உள்ளிட்டவைகள் குறித்தும் ஒத்திகை பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவா்கள், செவிலியா்கள், பாதுகாப்பு அலுவலா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.