கிருஷ்ணகிரியில் ஏப். 10-ஆம் தேதி சனிக்கிழமை மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து, நீதிமன்ற நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் ஒசூா், ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை, போச்சம்பள்ளி நீதிமன்ற வளாகங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் ஏப். 10-ஆம் தேதி முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவா் கலைமதி ஆகியோரின் தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடிகள், வழக்குரைஞா்கள் உள்பட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், வங்கிகள், தொழிலாளா் நல வழக்குகள், நிலுவையில் உள்ள பரஸ்பரம் பேசி தீா்த்துக் கொள்ளக் கூடிய குற்றவியல் வழக்குகளும் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டு அன்றைய தினமே அதற்கான தீா்வுகள் வழங்கப்பட உள்ளது.
ஆகவே, வழக்குரைஞா்களும், பொதுமக்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது வழக்குகளை மக்கள் நீதிமன்றத்தின் மூலம் சமரசமாகத் தீா்த்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.