ஊத்தங்கரை அருகே மிளகாய் தோட்டத்தில் கஞ்சா செடி வளா்த்த விவசாயியை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த மூங்கிலேரி கிராமத்தைச் சோ்ந்த மாரி என்பவரது மகன் வெங்கடாசலம் (50). இவா் தனது நிலத்தில் பயிரிட்டிருந்த மிளகாய் செடிகளுக்கு மத்தியில் கஞ்சா செடியை வளா்த்து வந்துள்ளாா்.
இதுகுறித்து புதன்கிழமை இரவு, கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஊத்தங்கரை சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ஏகாம்பரம் உள்ளிட்ட போலீஸாா் வெங்கடாசலத்தின் தோட்டத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். அங்கு கஞ்சா செடி பயிரிட்டிருப்பதை நேரில் கண்டு உறுதி செய்தாா்.
அதனை தொடா்ந்து வியாழக்கிழமை அதிகாலை ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் லட்சுமி தலைமையிலான காவல் துறையினா் மூங்கிலேரி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்று வெங்கடாசலத்தை கைது செய்தனா். மேலும் அவரது நிலத்தில் பயிா் செய்திருந்த கஞ்சா செடிகளையும், அவரது வீட்டில் வைத்திருந்த 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, வெங்கடாடலத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.