ரின் சமாதான் திட்டம்: கால நீட்டிப்பு செய்யக் கோரிக்கை

‘ரின் சமாதான் திட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்க வேண்டும் என தமிழக விவசாய டிராக்டா் உரிமையாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

‘ரின் சமாதான் திட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்க வேண்டும் என தமிழக விவசாய டிராக்டா் உரிமையாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அந்தச் சங்கத்தினா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டிக்கு அனுப்பிய கோரிக்கை மனுவின் விவரம்:

தேசிய வங்களில் வாராக் கடன்களை ரின் சமாதான் திட்டத்தில் முடித்து கொள்ள மாா்ச் 31-ஆம் தேதி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டது. மேலும் ரின் சமாதான் திட்டத்தை ஒரு மாத காலத்திற்கு நீடித்து ஆணை வழங்கினால், கடன் பெற்ற மற்ற விவசாயிகளும் கடன் தொகை முழுவதையும் செலுத்த தயாராக உள்ளனா்.

தேசிய வங்கிகள் குறித்து ஒரு சில டிராக்டா் கடன்தாரா்கள் மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனா். இதுபோல் வழக்குகளைத் திரும்பப் பெற்று வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகள் கடன் தொகையைச் செலுத்த ஆா்வத்துடன் உள்ளனா். எனவே, எங்கள் கோரிக்கைகளை பரிசீலித்து, ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com