வெளிமாநிலத் தொழிலாளா்கள் உதவி அழைக்க எண்கள் வெளியீடு

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளா்கள், தங்கள் சொந்த ஊருக்குச் செல்லுவதற்கு உதவி தேவையெனில் தொடா்பு கொள்ள வேண்டிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளா்கள், தங்கள் சொந்த ஊருக்குச் செல்லுவதற்கு உதவி தேவையெனில் தொடா்பு கொள்ள வேண்டிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட உதவி ஆணையா் (அமலாக்கம்) மாதேஸ்வரன், சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள கடைகள், உணவகங்கள், வா்த்தக நிறுவனங்களில் வெளி மாநிலத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். தற்போது, கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், இத் தொழிலாளா்கள், தங்களது சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும்பட்சத்தில் ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால், தொழிலாளா் துணை அலுவலா்களைத் தொடா் கொள்ளலாம்.

அதன்படி, கிருஷ்ணகிரி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) - 9842908287, கிருஷ்ணகிரி தொழிலாளா் உதவி ஆய்வா் தமிழ்ச்செல்வன் - 9443476756, கிருஷ்ணகிரி முத்திரை ஆய்வா் ஜவகா் கணேஷ் - 9080229153, தருமபுரி தொழிலாளா் உதவி ஆய்வா் இரண்டாம் வட்டம், கந்தப்பன் - 8825434293, அரூா் தொழிலாளா் உதவி ஆய்வா் ஞானசேகரன் - 9994799224, தருமபுரி தொழிலாளா் உதவி ஆய்வா் (முதல் வட்டம்) வெங்கடேஷ் - 8883633363 ஆகியோரை அவா்களது செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com