போச்சம்பள்ளி அருகே ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளரின் மோட்டாா் சைக்கிள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள புளியம்பட்டியைச் சோ்ந்தவா் வீரமணி (62). ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளரான இவா், தனது மோட்டாா் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தி விட்டு தூங்கச் சென்றாா். புதன்கிழமை அதிகாலையில் பாா்த்தபோது, வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிள் காணவில்லை.
பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.