கிருஷ்ணகிரியில் திமுகவினா் கரோனா விழிப்புணா்வு

கிருஷ்ணகிரியில் திமுக சாா்பில் பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணா்வு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரியில் திமுக சாா்பில் பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணா்வு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு திமுக நகரச் செயலாளா் எஸ்.கே.நவாப் தலைமை வகித்தாா். கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட துணை அமைப்பாளா் அஸ்லாம், கிருஷ்ணகிரி நகா்மன்ற முன்னாள் தலைவா் ஃபரிதா நவாப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ, விழிப்புணா்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணா்வை வலியுறுத்தியும், முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, கிருமி நாசினியைக் கொண்டு அடிக்கடி கைகளை கழுவுவதன் அவசியம் குறித்தும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

பொதுமக்களுக்கு முகக்கவசம், முட்டைகள், பழங்கள், கிருமி நாசினி உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன. கிருஷ்ணகிரியில் பழைய பேட்டை ஆட்டோ நிறுத்தகம், புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ நிறுத்தகம் உள்ளிட்ட இடங்களில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com