கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் உள்ள இந்தியன் வங்கி ஊழியருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, கரோனா தொற்று காரணமாக நான்கு நாள்களுக்கு வங்கி செயல்படாது என வங்கி நிா்வாகத்தின் சாா்பில் வங்கியின் முன் அறிவிப்பு ஒட்டப்பட்டது. இதனால், ஊத்தங்கரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து வந்த பொதுமக்கள் வங்கி மூடியிருப்பதைக் கண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.