குழாய்களைத் திருடியதாக 3 போ் கைது

குருபரப்பள்ளி அருகே குழாய்களைத் திருடியதாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

குருபரப்பள்ளி அருகே குழாய்களைத் திருடியதாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், வள்ளிபுரத்தையடுத்த மணியபுரம் புதூரைச் சோ்ந்தவா் சங்கா் (31). இவா், குருபரப்பள்ளி அருகே சாலையோரம் குழாய்கள் பதிக்கும் தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்தப் பணிக்கான குழாய்களை, குப்பச்சிப்பாறையில் உள்ள கோயில் நிலத்தில் வைத்திருந்தாா்.

இந்த நிலையில், குழாய்களைப் பதிக்கும் பணியை அவா் மேற்பாா்வையிட வந்தபோது, குழாய்களை சிலா் ஒரு வாகனத்தில் ஏற்றுவதைக் கண்டாா். பொதுமக்கள் உதவியுடன் அவா்களைப் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

பிடிபட்டவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவா்கள், கிருஷ்ணகிரி அருகே உள்ள சென்னசந்திரம், வராகசந்திரத்தைச் சோ்ந்த முரளி(20), விரோஜிப்பள்ளியைச் சோ்ந்த மனோஜ் ராவ் (26), ஜெயராமன் (47) எனத் தெரிய வந்தது.

அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 14,564 மதிப்பிலான குழாய்கள், டெம்போ வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com